search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை காலம்"

    • பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • சுற்றுலா பயணிகள் இந்த கூடாரத்தின் கீழ் வரிசையில் நின்றபடி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

    இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடை விடுமுறை சீசன் தொடங்கி இருப்பதால் கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணமாக இருக்கிறார்கள். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகள் படகு துறையில் கொளுத்தும் வெயிலில் தவித்தபடி பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

    படகு துறையில் நிழல் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் வெயிலினால் சில நேரங்களில் மயங்கி விழும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் கன்னியாகுமரி படகுதுறை வளாகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக நிழல் தரும் வகையில் தார்பாய் மூலம் கூடாரம் அமைத்துள்ளனர்.

    இதனால் சுற்றுலா பயணிகள் இந்த கூடாரத்தின் கீழ் வரிசையில் நின்றபடி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி படகுத்துறையில் நிழல் வசதி ஏற்படுத்தி இருந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் கோடைக்கு முன்பே கடுமையாக வெப்பம் வீசி வந்தது. கோடை வெயில் தொடங்கியவுடன் 100 பாரன்ஹீட் வெயில் பதிவாகி சதம் அடித்து வந்த நிலையில் ஏப்ரல் மாதம் முழுவதும் 104 பாரன்ஹீட் வெப்பம் தொடங்கி 108. 7 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கடும் வெப்பத்தால் அனல் காற்று வீசியதில் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர்.

    இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 108.5 பாரன்ஹீட் அளவில் கடுமையான வெப்பம் தாக்கியதில் தார் சாலைகளில் வெப்பம் பட்டு வெப்பத்துடன் சேர்ந்து அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டது. பின்னர் மாலை திடீரென 5 மணிக்கு மேல் சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதனால் குளிர்ந்த சீதோசன நிலை நிலவி பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வானம் போர்வையால் போர்த்தியது போல் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் வெப்பத்தின் தாக்கம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று 106.1 பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில் மாலை திடீரென தருமபுரி , பாரதிபுரம், ஒட்டப்பட்டி, அதனைச் சுற்றியுள்ள தடங்கம், ஆட்டுக்காரன் பட்டி, சோலை கொட்டாய், வத்தல்மலை உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது.

    பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அனல் காற்றின் தாக்கம் தணிந்து குளிர்ந்த சீதோசன நிலை நிலவியது. மேலும் இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கத்திரிப்பிறந்த முதல் நாளே மழை ஆலங்கட்டியுடன் கொட்டி தீர்த்தது. தொடர்ந்து கோடை மழை பெய்தால் வறட்சியால் தண்ணீர் இன்றி கருகும் பயிர்களை பாதுகாக்க முடியும் என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    நேற்று இரவு திடீரென பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரியூர் செல்லும் சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் சாய்ந்தது. இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மின்சரா துறையினர் சாலையில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.கடும் வெயில் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோட்டில் கடுமையான வெயிலால் வீடுகளில் புழுக்கம் நிலவி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் அளவு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேலும் வெயிலின் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக சுமார் 105 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. புழுக்கத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    மேலும் ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் மாவட்டத்தில் கடுமையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இது வரும் 29-ந் தேதி வரை நீடிக்கிறது. இதனால் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் வெயிலின் அளவு தினமும் உச்சத்தை தொட்டு 111 டிகிரி வரை பதிவாகி வருகிறது. இதனால் ஈரோட்டில் வெளியே செல்ல முடியாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் என்ன செய்வது என தெரியாமல் மக்கள் புலம்பி வருகிறார்கள்.

    ஈரோட்டில் கடுமையான வெயிலால் வீடுகளில் புழுக்கம் நிலவி வருகிறது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் பொது மக்கள் வீடுகளில் இருக்க முடியாமலும், வெளியில் செல்ல முடியாமலும் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகிறார்கள். வெயிலின் தாக்கம் காரணமாக மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. தொடர்ந்து நாளுக்கு நாள் வெயில் அதிகதித்து வருவதால் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வெளியே செல்லும் பெண்கள் முகத்தில் துணியும், குடை பிடித்த படியும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பழங்கள் விற்பனை கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் ரோட்டோரங்களில் சாத்துக்குடி, தர்பூசணி மற்றும் நீர்சத்து பழ வகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பழ வகைகளை அதிகளவில் வாங்கி சாப்பிடுகிறார்கள். பெரும்பாலான பொதுமக்கள் இயற்கைபானங்களை அதிகளவில் பருகி வருகிறார்கள். குறிப்பாக இளநீர், நுங்கு மற்றும் பழ வகை சாறுகளை அதிகளவில் பருகி வருகிறார்கள். இதனால் இளநீர் மற்றும் நுங்கு கடைகள் பல பகுதிகளில் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டுவதால் பொதுமக்கள் பலர் நீர் நிலைகளை தேடி குளித்து வருகிறார்கள். குறிப்பாக வாலிபர்கள் மற்றும் சிறுவர்கள் நீச்சல் குளங்களுக்கு சென்று நீண்ட நேரம் குளித்து மகிழ்கிறார்கள். மேலும் பலர் குளம், குட்டைகளுக்கு சென்று குளித்து வெப்பத்தை தணித்து வருகிறார்கள்.

    அக்னிவெயில் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம். அவர்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுரை கூறி பார்த்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதே போல் இன்று கொடிவேரி, காளிங்கராயன் அணைக்கட்டு மற்றும் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் இளைஞர்கள் வந்து நீண்ட நேரம் குளித்துக் கொண்டே இருந்தனர். கடும் வெப்பத்தால் சிறுவர்கள் பலர் தண்ணீரை விட்டு வெளியே வராமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குளித்து சூட்டை தனித்தனர்.

    • சேலம் மாநகரில் மதியம் 2 மணி முதல் வெயிலின் தாக்கம் குறைந்தது.
    • நீதிபுரம், லக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 7ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வரலாறு காணாத அளவுக்கு கொளுத்தியது . குறிப்பாக கடந்த 2-ந் தேதி அதிக பட்சமாக 108 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர்.

    இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று பொது மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 104.9 டிகிரியாக பதிவானது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் பல பகுதிகளில் லேசான மழை பெய்தது.

    ஏற்காட்டில் நேற்று காலை வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் மதியம் 1 மணியளவில் தொடங்கிய மழை 2.40 மணி வைர இடியுடன் கொட்டி தீர்த்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கல்வராயன் மலை, கருமந்துறை பகுதியில் மதியம் 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இதே போல சேலம் வலசையூர், சுக்கம்பட்டி, குப்பனூர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    சேலம் மாநகரில் மதியம் 2 மணி முதல் வெயிலின் தாக்கம் குறைந்தது. குளிர்ந்த காற்று வீசியது. மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது.

    மேட்டூரை அடுத்த கொளத்தூர் லக்கம்பட்டி, நீதிபுரம், காரைக்காடு, கண்ணாமூச்சு ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணிக்கு இடி, மின்னலுட்தன் தொடங்கிய மழை அரை மணி நேரத்திற்கும் மேலாக சூறை காற்றுடன் கன மழையாக கொட்டியது. இந்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கொளத்தூர் அருகே உள்ள தண்டா, நீதிபுரம், லக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 7ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதற்கிடையே மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 19 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு 14.8, ஆனைமடுவு 8, பெத்தநாயக்கன்பாளையம் 6, காடையாம்பட்டி 4.8, கரியகோவில் 2, சேலம் 0.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 54.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சூறாவளி காற்றில் முறிந்து சேதமாகின.
    • நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் சிறுமுகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான லிங்காபுரம், காந்தையூர் மற்றும் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கதளி, நேந்திரன், பூவன், செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் வாழைப்பயிர்களை சாகுபடி செய்து உள்ளனர்.

    நேற்று முதல் கத்தரி வெயில் தொடங்க உள்ள நிலையில் அங்கு காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    தொடர்ந்து மாலை 4 மணியளவில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காந்தையூர், லிங்காபுரம், காரமடை, வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக அந்த பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சூறாவளி காற்றில் முறிந்து சேதமாகின.

    இதுகுறித்து லிங்காபுரம் விவசாயி பிரகாஷ் என்பவர் கூறியதாவது:- எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்து வந்ததால் சிறுமுனை, லிங்காபுரம், காந்தையூர் மற்றும் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழைப்பயிர்களை விளைவித்து வந்தோம்.

    இந்த நிலையில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக எங்களில் பகுதிகளில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் முறிந்து சேதமாகி உள்ளன. எனவே தமிழக அரசு வாழை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல தொண்டாமுத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

    அதிக வெப்ப தாக்குதலால் 4 வகையான பாதிப்புகள் ஏற்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை வெப்பம் வாட்டி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 27 நாட்கள் ஈரோட்டில் 104 டிகிரி வெப்பம் பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உட்பட 8 மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட இந்த வார்டில் வெப்ப அலர்ஜியால் பாதிக்கப்பட்டு இங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதலுதவி அளிக்க செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை உறை விட மருத்துவ அதிகாரி கூறியதாவது:-

    அதிக வெப்ப தாக்குதலால் 4 வகையான பாதிப்புகள் ஏற்படும். வெப்ப எரிச்சலால் புண் ஏற்படும், தோல் சிவப்பாக மாறும், கால்களில் நரம்பு இழுத்துக் கொள்ளும், நீர்ச்சத்து குறைவால் வயிற்று வலி ஏற்படும், கோடை காலத்தில் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்படுகின்றனர். வெப்ப அலற்ஜி அல்லது வெப்ப பக்கவாத நோய் பாதிப்பு ஏற்படும் போது உடனடியாக உடல் வெப்பத்தை குறைக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்டவர்களின் கழுத்து பகுதி, முழங்கால் மடிப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஐஸ்கட்டிகளை கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும், உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்க குளுக்கோஸ், உப்பு கரைசல் நீரை வழங்க வேண்டும் என்று கூறினார்.

    • இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே 100 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவாகி வருகிறது.
    • அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    'அக்னி நட்சத்திரம்' என்று கூறப்படும் கத்திரி வெயில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. பொதுவாகவே கத்திரி வெயிலின் போதுதான் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே 100 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இன்று தொடங்கும் கத்திரி வெயிலின் தாக்கம் வரும் 28-ந் தேதி வரை நீடிக்கும். அதாவது, 25 நாட்கள் கத்திரி வெயில் வாட்டி வதைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும், சில மாவட்டங்களில் கோடை மழையும் பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் கத்திரி வெயில் சுட்டெரித்தாலும் அவ்வப்போது மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கோடை மழையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் தலா 1 செ.மீ. கோடை மழை பெய்துள்ளது. 

    அடுத்த 5 நாட்களுக்கு உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். இதேபோல, மே 7-ந் தேதி நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     

    • வெப்பத்தை தணிப்பதில் எலுமிச்சை பழம் முக்கிய பங்காற்றி வருகிறது.
    • கோடை காலம் முடியும் வரை எலுமிச்சை பழத்தின் விலை குறையாது.

    திருச்சி:

    தமிழகத்தில் கோடை வெயில் அனல் பறக்கிறது. இதில் உடல் வெப்பத்தை தணிப்பதில் எலுமிச்சை பழம் முக்கிய பங்காற்றி வருகிறது. நன்னாரி சர்பத், எலுமிச்சை ஜூஸ், லெமன் டீ போன்ற வற்றுக்கு எலுமிச்சை பழம் பயன்படுத்தப்படுகிறது.

    மேலும் இது எளிய மக்களின் தேர்வாகவும் எலு மிச்சை உள்ளது. தற்போது இதன் தேவை அதிகரித்து விளைச்சல் குறைந்துள்ள காரணத்தினால் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

    பெரம்பலூரில் எலு மிச்சை பழங்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல் தர எலுமிச்சை பழம் ஒன்று ரூ.4-க்கும், 2-ம் தர பழம் ஒன்று ரூ.2-க்கும் விற்பனையானது. ஆனால் தற்போது விலை உயர்ந்து முதல் தர எலுமிச்சை பழம் ஒன்று ரூ.8-க்கும், 2-ம் தர பழம் ஒன்று ரூ.4-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து எலுமிச்சை பழம் விற்பனை செய்யும் வியாபா ரிகள் கூறுகையில், பெரம்ப லூருக்கு அயிலூர் குடிகாடு, சிறுகன்பூர், திருச்சி மாவட்டம், திருப்பட்டூரில் இருந்து எலுமிச்சை பழம் விற்ப னைக்கு வருகிறது. வெயில் காலத்திற்கு முன்பு குறைந்த விலையில் விற்பனை செய் யப்பட்ட எலுமிச்சை பழம் தற்போது கோடை வெயி லினால் வரத்து குறைவாலும், தேவை அதிகமானதாலும் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    பெரம்பலூரில் எண் ணிக்கை அடிப்படையில் எலுமிச்சை பழம் விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலம் முடியும் வரை எலுமிச்சை பழத்தின் விலை அதிகரிக்குமே தவிர குறையாது என்றனர்.

    மணப்பாறை காமராஜர் மார்க்கெட் காய்கறி கமிஷன் மண்டி உரிமையாளர் நாகூர் கனி கூறியதாவது:-

    மணப்பாறை காமராஜர் மார்க்கெட்டுக்கு வையம் பட்டி, துவரங்குறிச்சி, விராலி மலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து விவசாயிகள் எலுமிச்சை பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

     தினமும் இங்கு 200 மூட்டை எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்படுகிறது. ஒரு மூட்டை 50 கிலோ எடை இருக்கும். இங்கு வரும் 200 முட்டை எலுமிச்சை பழங்க ளில் 80 சதவீதம் உள்ளூர் சில்லறை வியாபாரிகளுக்கு செல்கிறது.

    மீதமுள்ளவை ஒட்டன்சத்திரம் வியாபாரிகள் மூலமாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது மேற்கண்ட பகுதி களில் கடும் வறட்சி நிலவி வருவதால் விளைச்சல் சரிந்து உள்ளது. ஆகவே மார்க்கெட் டுக்கு 50, 60 மூட்டை எலுமிச்சை பழங்கள் மட்டுமே வருகின்றது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு மூட்டை எலு மிச்சை பழம் ரூ. 2000 முதல் 2500க்கு ஏலம் விடப்பட்டது. தற்போது தேவை அதிகரித்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ரூ. 7000 வரை ஏலம் போகிறது. இதனால் சில்லறை கடைக ளில் ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ. 12 என நிர்ண யிக்கப்பட்டுள்ளது. நன்னாரி சர்பத்தின் விலையும் பல இடங்களில் 20 லிருந்து ரூ. 25 வரை விலை உயர்ந்துள்ளது.

    • வெப்ப அலை வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    • கரூர் மாவட்டத்தில் வெறும் 4 சதவிகிதம் தான் காடுகளின் அளவு உள்ளது.

    கரூர்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. தினமும் வெயில் சதம் அடித்து வருவதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    அதிலும் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் அதிக பட்சமாக நேற்று முன்தினம் 113 டிகிரி பதிவானது. நேற்று 112 டிகிரி வெப்ப நிலை பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெயில் பதிவாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, கரூர் பரமத்தியில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் அதிகரிப்பதற்கு நிலப்பரப்பின் தன்மையே காரணம் என்கின்றனர் அறிவியலாளர்கள். இந்த பகுதியில் சூரிய கதிர்கள் செங்குத்தாக விழுகின்றன.

    வரலாறு காணாத வெயில் பதிவினால் கரூர் மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். க.பரமத்தி பகுதிக்குட்பட்ட தென்னிலை, பவித்ரம், சின்ன தாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமப் பகுதியில் விவசாயம் சார்ந்த ஆடு, மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் விவசாயிகள், ஆடு மாடு தொழில் செய்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பொதுமக்களின் நடமாட்டம் வெளியே குறைந்து உள்ளது. மேலும், கிராமப்புற சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    கொளுத்தும் வெயிலால் சாலைகளில் கானல் நீர் மற்றும் வெப்ப அலை வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் சாலைகளில் குடைபிடித்தப்படி செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் சுற்றிக் கொண்டு செல்கின்றனர்.

    பொதுவாக கோடை காலங்களில் வேலூர் மாவட்டத்தில்தான் அதிகம் வெப்பம் பதிவாகும். ஆனால், கடந்த சில வருடங்களாக கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி பகுதிதான் அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக மாறியுள்ளது. அதற்கு காரணம், இங்கு மரங்கள் குறைவாக உள்ளதும், மழையை அதிகம் ஈர்க்காத சுண்ணாம்பு மண் நிறைந்த பகுதி என்பதும் தான். பொதுவாக நல்ல இயற்கை சூழல் இருக்க வேண்டும் என்றால், ஒரு மாவட்டத்தில் 32 சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும்.

    ஆனால், கரூர் மாவட்டத்தில் வெறும் 4 சதவிகிதம் தான் காடுகளின் அளவு உள்ளது. இதனால், வெப்பம் கடுமையாக இருக்கிறது. அதேபோல், க.பரமத்தி பகுதியில் அதிக வெயில் அடிக்க காரணம் இங்கு இயங்கி வரும் 300-க்கும் மேற்வட்ட கல்குவாரிகள் தான். இங்கு அதிகம் மரங்கள் வளர்க்க வேண்டும். கல்குவாரிகளை கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் வருங் காலங்களில் இங்கு வெயில் தணியும். இல்லையென்றால், க.பரமத்தி பகுதியே மனிதர்களே வசிக்க முடியாத அளவுக்கு பாலை வனமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது.


    காவிர் பாயும் மாவட்டத்தில் உள்ள க.பரமத்திக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்கின்றனர் மக்கள். இந்தப் பகுதி மக்கள் அதிகம் வெயிலிலிருந்து தங்களை காத்துக்கொள்ள வீட்டில் இருப்பது நல்லது. அல்லது குடை போன்ற தற்காப்பு பொருள்களை பயன் படுத்துவது சிறந்தது. முதியவர்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தேவையான தண்ணீரை அனைத்து மக்களும் அருந்த வேண்டும்" என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

    இது தொடர்பாக கரூர் மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் ஜான் பாஷா கூறியதாவது:-கடந்தாண்டு இதே காலகட்டத்தில் அதிகபட்சமாக 90 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை மட்டுமே பதிவானது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னரே 100 டிகிரி தாண்டியது. மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள வானிலை ஆராய்ச்சி மையம் கரூரில் பரமத்தி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    பூமியின் அட்சரேகையில் நேரடியாக பரமத்தி பகுதி வருவதால் அங்கு வானிலை ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. பொதுவாக பரமத்தி பகுதியில் அதிகபட்ச வெயில் பதிவாகி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

    குறிப்பாக இங்கு பவர் கிரேட் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளிலும் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. கல் குவாரிகள் இந்த பகுதியில் இயங்கி வருகிறது. இந்த குவாரி இருக்கும் பகுதிகளிலும் மரங்கள் இல்லை.

    இது போன்ற காரணங்களால் பரமத்தி பகுதியில் அதிகபட்ச வெயில் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது 120 டிகிரியை தாண்டிவிடுமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    அந்த அளவுக்கு உயர வாய்ப்பில்லை. 120 டிகிரியை தாண்டிவிட்டால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாது. அதையும் மீறி வெளியே சென்றால் பக்கவாதம், மாரடைப்பு மயக்கம் போன்றவை ஏற்படும்.

    குழந்தைகளுக்கு அம்மை மற்றும் காசநோய் வர வாய்ப்புள்ளது. அவ்வாறான சூழல் இப்போதைக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறினால் 2040 காலகட்டத்தில் 120 டிகிரியை தாண்டிய வெப்பநிலையை சந்திக்க நேரிடும் என்றார்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கரூர் பரமத்தி பகுதிக்கு பிரத்யேக திட்டம் தயாரித்து அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். திரும்பும் திசையெல்லாம் மரங்கள் நடப்பட்டால் நிச்சயமாக வரும் காலங்களில் வெயில் அதிகரிப்பை கட்டுப் படுத்தலாம் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடை வெயில் தொடங்கிய நிலையில் புதுவையில் வெயில் அளவு 95 டிகிரிக்குள்ளேயே இருந்து வந்தது
    • சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுவையில் கடந்த ஆண்டுகளில் இல்லாததைவிட தற்போது அதிக அளவில் வெயில் கொளுத்தி வருகிறது. இயல்பைவிட 9 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    கோடை வெயில் தொடங்கிய நிலையில் புதுவையில் வெயில் அளவு 95 டிகிரிக்குள்ளேயே இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் 98.6 டிகிரி என பதிவானது. நேற்று 100.4 டிகிரியாக வெயில் பதிவானது. இதன்மூலம் இந்த ஆண்டு முதல்முறையாக 100 டிகிரியை வெயில் தாண்டி உள்ளது.

    வழக்கத்தை விட காலை 10 மணிக்கு மேல் பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்தது. நேற்று மே தின விடுமுறை என்பதால் பொதுமக்கள், தொழிலாளர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினார்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே வந்தவர்கள் தகிக்கும் வெயிலால் தவித்தனர்.

    இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை நிர்வாகம் எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள அதிதி சிக்னலில் தற்காலிக பச்சை நிற மேற்கூரையை அமைத்துள்ளது.

    சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் தமிழகத்தில் திருச்சி மாவட்டத்திலும் சிக்னலில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 100 மீட்டருக்கு 1 சிக்னல் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்க முடியாமல் தவித்து வந்தனர். சிக்னலில் தவிக்கும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க காவல் துறை சார்பில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பட்டால் சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருச்சி, புதுச்சேரியை தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் சிக்னலில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • கடும் வெயிலின் காரணமாக காமேசுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
    • மும்பையில் இருந்து காமேசை ஆம்புலன்சில் கொண்டு வர ரூ.82 ஆயிரம் செலவானதாக கூறப்படுகிறது.

    திருக்கனூர்:

    புதுச்சேரியில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். பலரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பம் அதிகரித்துள்ளது.

    புதுச்சேரி திருக்கனூர் புதுநகரை சேர்ந்தவர் முருகன் ராமசாமி. தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது இளைய மகன் காமேஷ் (வயது 23) மரைன் என்ஜினீயரிங் படித்துள்ளார். வேலை தேடி காமேஷ் கடந்த மாதம் மும்பைக்கு சென்றார்.

    அங்கு ஒரு அறையில் வாடகைக்கு தங்கி பல நிறுவனங்களுக்கு வெயிலில் சென்று அலைந்து திரிந்து வேலை தேடியுள்ளார். ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கடும் வெயிலின் காரணமாக காமேசுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மும்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படாததால் முருகன் ராமசாமி காமேசை மும்பையில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

    மும்பையில் இருந்து காமேசை ஆம்புலன்சில் கொண்டு வர ரூ.82 ஆயிரம் செலவானதாக கூறப்படுகிறது.

    அந்த பணத்தையே முருகன் ராமசாமி கடன் வாங்கி செலுத்திய நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் பல லட்சம் செலவாகும் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்.

    வறுமையில் வாடும் முருகன் ராமசாமி தனது மகனின் உயிர் காக்க தன்னார்வலர்களும் புதுச்சேரி அரசும் உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருக்கனூர் இளைஞர் மும்பையில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திருக்கனூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வெப்ப அளவாக பதிவாகியுள்ளது.
    • தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    அதிலும் கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியையும், சில நேரங்களில் 105 டிகிரி கடந்தும் வெயில் பதிவாகி வருகிறது.

    இதில் ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வெப்ப அளவாக பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 11-வது நாளாக நேற்று 110 டிகிரி வெயில் கொளுத்தியது.

    இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவிலும் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

    ×